மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து

481 0

201606301217436804_income-tax-officer-caught-fire-in-Madurai_SECVPFமதுரை பீ.பி.குளத்தில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு வருமான வரி கட்டு வோரின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவ்வலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் நேற்றிரவு 11 மணி அளவில் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீப்பிடித்து கொண்டிருந்த அறைக்குள் தண்ணீரை பீச்சியடித்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் அந்த அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்பட பல ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயை உடனடியாக அணைத்ததால் மற்ற அறைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தீ பிடித்த அறையில் சுவரோடு இணைக்கப்பட்ட மின் விசிறியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறியாகி அருகில் இருந்த ஆவணத்தில் விழுந்ததால் இத்தீவிபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a comment