யாழ். மாவட்ட மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது

270 0

கடற்றொழிலுக்குச் சென்றிருந்த யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் 18 பேர் நேற்று முன்தினம் அதிகாலை இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் எழுவை தீவில் இருந்து ஆறு படகுகளில் புறப்பட்ட12 மீனவர்களும், பருத்தித்துறை தஸ்கோட்டையில் ஒரு படகில் புறப்பட்ட 3 மீனவர்களும், மயிலிட்டியில் இருந்து தொழிலுக்குச் சென்ற ஒரு படகில் 3மீனவர்களும் என ஒரே நாளில் 18 இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை மீனவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீட்டுத் தருமாறு யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கடற்றொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.