தியாகி திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

255 0

தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர் யோகறாணி நிகழ்தியதுடன், ஈகைசுடரும் ஏற்றப்பட்டது.

நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.