சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

256 0

சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வயோதிபர் கடந்த 01.07.2019 அன்று மட்டக்களப்பு தனியார் பயணிகள் பஸ் நிலையத்தில் அநாதவாகக் கிடந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை 06.09.2019 மரணமானார்.

அந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த வயோதிபரைப் பற்றிய தகவலறிந்தோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு 0652224422 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.