நீதிக்கான நடைபயணம் இன்று 5வது நாளாக சொன்ஸ் மாநகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.

518 0

நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி 8.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரான்ஸ் பாரிஸ் சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. நேற்று கடும் வெப்பமாகவும் இன்று மழை பெய்துகொண்டிருக்கின்றது. இருந்தும் 2 கிலோ மீற்றரில் உள்ள மாநகரசபை முன்பாக தரித்து நின்று அதன் பின்னர் இன்று முடிந்தளவு நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளர்.

நீதிக்கான நடைபயணம் இன்று சொன்ஸ் பகுதியில் நாடாத்திய நிழற்பட கவனயீர்ப்பில் பல பிரெஞ்சு மக்கள் கலந்து கொண்டு எமது நோக்கத்தின் விளக்கங்களை அறிந்து கொண்டனர்.