தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதியளிப்பவர்க்கே ஆதரவு – சாந்தி

390 0

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதி வழங்குபவர்க்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை பெறுவதற்காக தென்பகுதியினர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

நாங்கள் இனியும் ஏமாறுவதாக இல்லை. கடந்த 70 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டது போதும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது, யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தீர்மானிக்கவில்லை.

ஆனால், தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதி வழங்குபவர்க்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்” என மேலும் தெரிவித்தார்.