அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பரிதாப பலி

240 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏற்கனவே, ஆகஸ்டு 4-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.