ஸ்ரீதரன் எம்.பி.யின் வீடு அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிப்பு!

232 0

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் மற்றம் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.