சிறிலங்கா வான் கழுகுகளால் காவு கொள்ளபட்ட சிட்டுக்கள் !

722 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை கோரத்தாக்குதல்கள் பலவற்றை மேற்கொண்டது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல் , நவாலி சென்.பீற்றர்ஸ்
தேவாலயத்தின்   மீதான தாக்குதல், வள்ளிபுனம் செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆகியன எம் மக்களின் மனங்களில் என்றுமே  ஆறாத வலியையும் வடுக்களையும்  ஏற்படுத்தி விட்டன.

1995 செப்டெம்பர் 22 ஆம் நாள் மதிய நேரம் யாழ்ப்பாணம், நாகர்கோவில் மகாவித்தியாலய
மாணவர்கள் மைதானத்தில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்ருந்தனர். அவ் வேளை பிணம் தின்னிக் கழுகாக வந்த  சிறிலங்கா விமானப் படைகளின் “புக்காரா” குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக மாணவர்கள் மீது வீசியது. அதில் 25 மாணவ மணிகள் உடல் சிதறி பலியானார்கள். அத் தாக்குதலில்  மொத்தமாக 39 பேர் கொல்லப்பட்டனர்.

நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் விமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டதனை சிறிலங்கா அரசாங்கம் ஊடக தணிக்ககை மூலம் வெளிவராமல் மூடிமறைத்ததுடன் அதனை  மறுப்பும் தெரிவி்த்தது.

மீண்டும் சிங்கள பேரின வாதத்தின் கோரப்பசிக்கு “கீபீர்” போர் விமானங்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14, ஆம் நாள்  செஞ்சோலையில் மாணவிகளை பலி எடுத்துக் கொண்டது.

தலைமைத்துவ பயிற்சிக்காக மாணவிகள் ஒன்று கூடியிருந்தனர் .கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு,”Women’s Rehabilitation and Development (CWRD)” நிதி உதவியுடன் இப் பயிற்சி நெறி ஒழுங்கு படுத்தப்பட்ருந்தது. சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டு துல்லியமாக மாணவிகள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்செய்தி சர்வதேச  முக்கிய ஊடகங்களில் வெளியாகிய போதிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மௌனமாகவே இருந்தது என்பதே வேதனையான விடயம்.

சிறிலங்கா அரசாங்கத்தின்  மிலேச்சத்தனமான இந்த  இனப்படுகொலையை உலகம் உற்று நோக்காதது எமக்கான சபக்கேடு.

13 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை 14 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள  நிலையில் வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு  சிறிலங்கா காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை நேற்றைய தினம்  புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.

உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு சிறிலங்கா காவல் துறையினர் தடை விதித்திருக்கிறார்கள்.

இறுதிப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்  கூட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே!

தாயகத்திலும் புலத்திலும் உள்ள மாணவர்களே இது பற்றி சிந்தியுங்கள்! செய்ற்படுங்கள்!

மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதனை  உறுதி  எடுத்துக் கொள்ளுங்கள்.!