வவுனியா சன்னாசிபரந்தன்  பகுதியில்  இன்று (06.08)  மாலை 3.00மணியளவில் மாடு மேய்ப்பதற்காக சகோதரர்கள் இருவர்  காட்டுப்பகுதிக்கு  சென்றுள்ளனர்.

இதன் போது  மாலை 3.30 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய ஆகிய  இருவரும்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன