புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் இலங்கையில் அடுத்த ஆண்டு மக்கள் கருத்து கணிப்பு – செயிட் அல் ஹூசைன்

431 0

mahinda-samarasinghe1-415x260இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பு ஒன்று அடுத்த வருடம் நடத்தப்படும் என செயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனினால் முன்வைக்கப்பட்டது.
இலங்கை தொடர்பான அந்த அறிக்கை ஆணையாளரினால் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை சந்தித்தார்.
முன்னதாக, மனித உரிமைகள் சபையில் இலங்கை சார்பில் உரையாற்றிய மக்கள சமரவீர, வடக்கில் உள்ள பொதுமக்களின் அனைத்து காணிகளும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டாகும் போது முற்றாக விடுவிக்கப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment