மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.!

903 0

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து வைத்திருக்கும் பால பூமி. மணலாறு, தமிழீழத்தின் இதயத்தைப் பிளந்து தமிழ் மக்களின் தாயக தாகத்தை அழுத்து விடத் துடிக்கும் எதிரிக்கும் அந்தப் பிராந்தியம் முக்கியமாகத்தான் இருந்தது. மிகக் குறுகிய காலப் பகுதியில் சிங்கள பேரினவாத அரசு ‘வெலி ஓயா’ என புதிய நாமம் சூட்டி அப்பகுதியில் வாழ்ந்த தமிழ் சுதேசிகலையெல்லாம் விரட்டியடித்து, அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சில அபகரிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் வீறாப்புடன் எழுந்து நிற்பதுதான் ‘மண்கிண்டிமலை’ அது எதிரியின் பாசையிலே ‘ஜானக புர’.

ஆனால்….. 25.07.1993 அன்று இரவு விடிந்தபோது, எதிரு அதிர்ந்தான். உலகம் வியந்தது. சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது. ‘வெட்கத்துக்குரிய நாள். எது பிழையாகிப் போனது?’ இப்படிப் பலவாறு தமது இராணுவத் தோல்விகளை தாங்கிக்கொள்ள ம்,உடியாமல் அழுதன பல சிங்களதேச நாளேடுகள்.

ஆம், பேரின அரசினால் மிகப்பெரிய தமிழினப் படுகொலை நடாத்தி முடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் நிறைவெய்திய வேளையில் கடந்த 25.07.1993 அன்று இரவோடு இரவாக இப்பகுதியின் மிகப் பெரிய முகாம்…. எதிரி தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ததெனக் கருதி வந்த முகாம்…. அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு இராணுவத் தாக்குதலுக்கும் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்துப்பட்டு வந்த மண்கிண்டிமலை இராணுவ முகாம்…..

அத்துடன் அதனைச் சூழ்ந்திருந்த சிறிய முகாம்களும் அரைமணி நேரத்தில் தகர்த்தழிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதயபூமி 01 எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிப் போராளிகளினாலும் அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்ற துணைப்படை வீரர்களினாலும் நடாத்தப்பட்ட இந்த மின்னல் வேக, வெற்றிகரமான தாக்குதலில் தமது இனிய உயிர்களை இதயபூமிக்குத் தந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் உறங்கிக் கொண்டனர் பத்து வேங்கைகள்.

70க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டு, 5 கோடி பெறுமதியான ஆயுதங்கள் அள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறிய இதயபூமி 01இன்னும் எத்தனை தடவைகள் இந்தப் பகுதியில் வேடிக்கப்போகின்றதோ என்று எதிரி ஏங்கிக் கொண்டிருக்கிறான்.

-எரிமலை இதழ் (1993)-