யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

221 0

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 55 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கைது நடவடிக்கையை வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று  முன்னெடுத்தனர்.

கைதானவரை, விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.