வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடைய வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மானிப்பாயில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், டச்சு வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30 பவுண் நகைகள், 600 யூரோ, மற்றும், 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களது உறவினர்களுடைய வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
நேற்று இரவு அனைவரும் நித்திரையிலிருந்த போது குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து அதனூடாக கொள்ளையர்கள் வீட்டினுள் இறங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.