வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலுடன் தாண்டிக்குளம் பகுதியில் 10.45மணியளவில் ரயில்க் கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளன.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் தரிப்பிடப்பகுதிக்கு பின்பாகவுள்ள  மாடுகளும் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு மாடும் இவ்வாறு ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் ரயில்க் கடவையில் சென்றபோது ரயிலுடன் மோதி உயிரிழந்ததையடுத்து  தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை காரணமாகவே கால் நடைகள் மேய்ச்சல் தரைகளை, தண்ணீரை நாடிச் செல்லும்போது ரயில்க்கடவைகளிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் சென்றபோது இவ்வாறு உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.