வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

292 0

இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள்.

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் படையினர், பொலிசார் தமது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் புதிய பேருந்து நிலையம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள பல பாகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்குத்திரும்பியுள்ள இந்நிலையில் வவுனியா பஸ்  நிலையத்தில் படையினர் தமது தற்காலிக சோதனை சாவடியை அமைத்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளையும் , பொதிகளையும் தீவிர சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பஸ் நிலையத்திற்கு வரும் மக்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை வவுனியாவில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையிலும் வவுனியா பஸ் நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனை நடவடிக்கைக்குட்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.