தமிழகத்துக்கு கடந்த 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 1.72 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அரசு திறந்து உள்ளதாக காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது.

