வரட்சியால் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

352 0

வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து கரையொதுங்குகின்றன.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது.

இவ்வரட்சி காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன. குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது.

இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.