எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  10ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது .

இதனை முன்னிட்டு நேற்று மாலை  சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நினைவுதூபியில் எல்லோரும் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டபின்னர்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவில் உள்ள அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள் கரைதுறைப்பற்று  பிரதேசசபை உறுப்பினர்கள் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், யாழ் பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் .

இந்தநிலையில் இம்மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்  வழைமைபோல அஞ்சலி செலுத்தி  தீபம் ஏற்ற உரிய  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .