சாவகச்சேரியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

289 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ஆம் நாள் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) சாவகச்சேரியில் இடம்பெற்றது.

3ஆம் நாளின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரி நகரின் பொதுச் சந்தைப் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை வாரத்தின் 3 ஆம் நாளின் முதல் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் முள்ளவாய்க்கால் வாரத்தின் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்படி 6 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று, நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளது.