சட்ட விரோதமாக கால் நடைகளை ஏற்றிச் சென்றவர் கைது!

339 0

கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக கடற்படை அதிகாரிகளால் மாங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேடசோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்கேணி – வாகரை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த கெப் வாகனம் சோதனையிடப்பட்ட போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய வாழைச்சேனை பிரதேசர்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.