கைதான பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

410 0

வட தமிழீழம் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கோப்பாய் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் வாசல் தலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு  சிங்கள பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பல் கலைக்கழக மாணவர்கள்தொடர்பான வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக எதிர்வரும் திங்கட் கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.