பாகிஸ்தானில் வெயில் தாக்குதலுக்கு 15 பேர் பலி

429 0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தானில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலர் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.