வட்டக்கச்சி விபத்தில் ஒருவர் பலி- இருவர் படுகாயம்

5229 0

accident 554fவட்டக்கச்சியில் மோட்டார் சைக்கிளொன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் பன்னங்கண்டியில் இருந்து வட்டக்கச்சி நோக்கி நான்கு பேருடன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வட்டக்கச்சி சுவிற்செண்டர் முகமட் முன்பள்ளிக்கு அருகாமையிலுள்ள பாலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார்து. இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர் சாந்தபுரம் அம்பாள் நகரை சேர்ந்த 28 வயதான துரைராசா இராமகிஸ்ணன் என கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment