கடந்த ஆண்டில் கண்டல்காடில் 227 சுற்றிவளைப்புகள் ; 229 பேர் கைது

319 0

கின்னியா – கண்டல்காடு  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 227 சுற்றிவளைப்புக்கள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 229 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் சட்டவிரோத மணல் அகழ்விற்காக பயன்படுத்திய  336 பாரவூர்திகள், 111 டிப்பர் வண்டிகள் மற்றும் 116 டக்டர்  வண்டிகளும்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment