இறுதி யுத்தத்தில் எமக்காக ஒரு பிள்ளை இழந்த பெற்றோர் யாசகம் கேட்கும் நிலை!

367 0

நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில் படுத்துரங்கும் நிலையும் உண்டு.

அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதினொன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப் பாத்திரங்கள் எம்மிடையே உள்ளனர்..

 அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை.எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் அடங்குவர்.

வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில்  சிறப்பாக வாழ்ந்தவர்கனே.

 ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழ போராட்டத்திற்காக அர்பணித்தவர்கள்.

மௌனிக்கப்பட்ட   யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது.  அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர். 

நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம்.

 மக்கள் புலக்கம் அதியமுள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிளும் வீதி சுற்று வட்டங்களிளும் கத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதும் ஏமாற்றமே மீதமாகின்றது.

அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம். 

அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை முல்லைதீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளனர்.

இவர்களின் நிலைக்கும் எதோ ஒரு வகையில் நாமமும் ஒரு காரணம்.

ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இப் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும்  மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய்.

 எப்போதும் இவர்களை இந்நிலைக்கு ஆழாக்கிய சாபம் பின் தொடரும் .

இவ்வாறனவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது. என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Leave a comment