இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்!

319 0

கிளிநொச்சிக்கு வருகை தந்த அரச அமைச்சர் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிற்கு வழங்கவென வழங்கிய உதவிப்பொருள்கள் யாழ்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் நேற்று கிளி மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டவையென்பது அம்பலமாகியுள்ளது.


திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தது.


கூட்டமைப்பின் அழைப்போடு அவசர அவசரமாக வெறுங்கையுடன் ஓடி வந்திருந்த அமைச்சர் எதையாவது மக்களிற்கென கையளித்து படம்பிடிக்க விரும்பினார்.இதனையடுத்து அவசர அவசரமாக நேற்றைய தினம் மக்களிற்கென விநியோகிக்கவென வழங்கப்பட்டு மாவட்ட செயலக களஞ்சியத்திலிருந்த பொருட்களை எடுத்து படம்பிடித்துவிட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.


இதனிடையே கிளிநொச்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாமதமாக கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில் இடநெருக்கடி காரணமாக பி;ன்னாலிருக்க வேண்டியிருந்தது.

Leave a comment