அகதிகள் நாடு திரும்பினர்

279 0

09threfugees_831446f-720x480தென்னிந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்த மேலும் ஒரு குழுவினர் நாடுதிரும்பியுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளையை சேர்ந்த இவர்கள் ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இலங்கை வந்துள்ளனர்.

41 ஆண்கள் மற்றும் 35 பெண்களை கொண்ட இந்த குழுவினருக்கு அடிப்படை செலவீனங்களை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 ஆயிரத்து 35 அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் உள்ள 109 சேமநல நிலையங்களில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.