புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபரின் வழக்கு ஒத்திவைப்பு

329 0

body

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ரவிசந்திரனின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரிடம் நீதவான் சாந்தனி மீகொட விசாரணைகளை நடாத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளின் பின்னர் சம்பவத்தின் மர்மம் காணப்படுவதாக கூறி, வழக்கு விசாரணைகளை நீதவான் ஒத்தி வைத்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.