கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

244 0

கோப்பாய், சுன்னாகம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம், வடக்கு உரெழு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் அப்பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment