யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம்

4894 0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடை பவனி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து, அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி ஆரம்பமானது.

இதற்கமைய இன்று யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும் என நடைபவனியை ஆரம்பித்துள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a comment