சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் பலத்த மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, ராயப்பேட்டை, மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.