அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்

2037 0

தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரத போராட்டதுக்கு வலு சேர்க்கும் முகமாக ஆதரவு போராட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

குறித்த உண்ணாவிரத போராட்டத்தை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் அமைப்பான தேசத்தின் வேர்கள் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

 

குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment