சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை!

236 0

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a comment