தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்கள் பண்டையகால மன்னர்கள்போன்று இரவு உலா சென்றாவது, சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் விவகாரங்கள் மற்றும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் பங்குபோடும் அரசியலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியை பலியாக்க நாங்கள் தயாரில்லை என்றும், எம்மோடு தமிழர் விடுதலைக்கூட்டணியாக இணைந்து ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவே விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.