30.9.2018 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

28091 0

30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயூ, ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.

தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில் சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம், இசைவணக்கம், மற்றும் கவிதைகள் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன. ஆரம்ப நிகழ்விலிருந்து இறுதிவரை இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிருந்து வீரத்தளபதிகளுக்கு தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர். இறுதி நிகழ்வாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

       

 

Leave a comment