கல்முனை கரையோர கடற் பிராந்தியங்களில் அதிகளவான கீரி மீன்கள்

210 0

மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்று (30) கல்முனை கரையோர பிரதேசங்களில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மருதமுனை தொடர்க்கம் நிந்தவூர் வரையான கடற் கரைவலை தோணிகளுக்குக் கீரி மீன்கள் அதிகளவாக பிடிபட்டன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மீன்கள் ஒரு கிலோ 50 ரூபாய் தொடக்கம் 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் இம் மீன்கள் குளிரூட்டப்பட்டு நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படும், அதேவேளை கருவாடாகவும் மீனவர்களினால் பதினிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment