ஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது.இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையாலும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாகவும் வேற்றின பொது அமைப்புகளிடம் சிறிலங்காவின் போலி முகத்தை அம்பலப்படுத்தவும் “மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன? ” எனும் தலைப்பில் பக்க அறை நிகழ்வு நாளைய தினம் மதியம் 2 மணிக்கு ஒழுங்குசெய்யப்படுள்ளது. இவ் நிகழ்வில் புலம்பெயர் இளம் தமிழ் மனிதவுரிமையாளர்கள் மற்றும் சடடத்தரணிகள் கலந்துகொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர்.
39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை மனிதவுரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஜெனிவாவில் உள்ள தூதரகங்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் எஸ்டோனியா நாடுகளின் ராஜதந்திரிகளுடன் அரசியல் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக தமிழர் தாயக நிலப்பரப்பில் தொடரும் சிறிலங்காவின் “நல்லாட்சி” அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பாகவும் முக்கிய விடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட நாடுகள் இம்முறை பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்பதையும் கோரப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன?
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025


