முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

350 0

anura2-720x480பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹெண்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜூதீன் கொலை தொடர்பான வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தாஜூதீனின் கொலை தொடர்பான சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டிற்காக அநுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.