தமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா?-விக்னேஸ்வரன்

639 0

யுத்த குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தினரை தண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது தமிழ் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காகவா அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் விக்னேஸ்வரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

வி;க்னேஸ்வரன் சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்

குறிப்பிட்ட கடிதத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல முறை சுட்டிக்காட்டியுள்ளதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் உங்கள் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்தே தமிழ் அரசியல் கைதிகள் தற்போது  சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என சிறிசேனவிற்கு எழுதிய கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கண்துடைப்போ என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a comment