வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

265 0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் – கொழும்பு பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது குறித்த பஸ்ஸில் பயணித்த கொழும்பை சேர்ந்த  19வயதுடைய சத்தியவேல் சஞ்சீவன் என்ற இளைஞனை 6கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment