கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது

384 0

கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறுகண்டிப் பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து கட்டாக்கலி மாடுடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கண்டர் வாகனத்துடனும் மோதி இந்த விபத்து சம்பவத்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment