சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை மறுதினம் (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், சச்சிதானந்தனுக்கு கடந்த 16 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

