பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது

214 0

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 2 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டது எனவும் அந்நாட்டின் கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a comment