அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ளார், அதில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.