இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையிலேயே கடந்த சில வாரங்களாக பல அரசியல்வாதிகள் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த வகையில் நேற்று வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவகரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்