16 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

233 0

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு காரில் 16 கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்த 5 பேரை வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ​தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஊழல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ. சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் வைத்து இரு கார்ககளையும் நிறுத்தி சோதனையிட்டபோது காருக்குள் மறைத்து வைத்திருந்த 16 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்ததுடன் இரு கார்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment