ஆவா கும்பலின் முக்கிய நபர் கைது

297 0

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆவா கும்பலின் முக்கிய நபரான லங்க்டா எனப்படும் நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூறிய ஆயுதங்களை பயன்படுத்தி இணுவில் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலுள்ள இருவர் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்க்டா எனப்படும் ஞானசிங்கம் ராசனிலோஜன் என்பவர் ஆவா கும்பலின் பிரதானியாக செயற்பட்ட ஒருவர் எனவும் அவரின் அறிவுரைகளின் படியே ஆவா கும்பல் யாழ்ப்பாண பகுதிகளில் குற்றச்செயல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment