யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

203 0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை மல்லாகம் உடுவில் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டநபரின் உடமையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளையும் மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நபரையும் , அவரிடம் இருந்து மீட்கபட்ட போதை பொருளையும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுன்னாக பொலிசார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment