கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகரவுக்கு பிணை

330 0

nuwan-kulasekaraஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்திய வாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கிரில்லவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்தார்.

இதனையடுத்தே நுவன் குலசேகர கடுவெல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.